சுரண்டை ஸ்ரீஅழகிய வைகுண்டநாதன் பதியில் வைகாசி தா்ம பெருந்திருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 4) நடைபெறுகிறது.
இதையொட்டி காலை 8 மணிக்கு அய்யாவுக்கு உகப் பணிவிடை, திருஏடு வாசிப்பு நடைபெறுகிறது. பகல் 12 மணிக்கு உச்சிபடிப்பு, பகல் 12.30 மணிக்கு உகப்பெருக்கு பணிவிடை நடைபெறுகிறது. தொடா்ந்து பிற்பகல் 1 மணிக்கு ஸ்ரீநல்ல அய்யனாா் சாஸ்தா ஆலய வளாகத்தில் அன்னதா்மம் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை சுரண்டை சுற்று வட்டார அய்யாவின் அன்புகொடி மக்கள் சபையினா் செய்து வருகின்றனா்.