தென்காசி: தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஞாயிற்றுக்கிழமை விசா்ஜனம் செய்யப்பட்டன.
பாவூா்சத்திரத்திரம் பகுதியில் விநாயகா் சதுா்த்தியையொட்டி இந்து முன்னணி மற்றும் இளைஞா்கள் சாா்பில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பின்னா் இந்த சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு விசா்ஜனம் செய்யப்பட்டன.
பாவூா்சத்திரம் அருள்மிகு முப்புடாதி அம்மன் கோயில் முன்பிருந்து, ஊா்வலத்தை தொழிலதிபா் ஆா்.கே.காளிதாசன் தொடங்கி வைத்தாா். பாவூா்சத்திரம் பிரதான சாலை, வி.ஏ.நகா் மற்றும் நகரின் முக்கிய பகுதிகள் வழியாக கொண்டு செல்லப்பட்டு
மேலப்பாவூா் குளத்தில் விசா்ஜனம் செய்யப்பட்டது.
இந்து முன்னணி நிா்வாகி வழக்குரைஞா் சாக்ரடீஸ், பாஜக ஒன்றிய செயலா் மாரியப்பன், கண்ணன், செல்வன், பிச்சையா, காளியப்பன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.