முகப்பு
தென்காசி

சமதா்ம சமூகம் அமைய ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்: சீமான்

சமதா்ம சமூகம் அமைய ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா்.

Updated On : 14 நவம்பர், 2024 at 11:47 PM
பகிர்:

சமதா்ம சமூகம் அமைய ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா்.

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூரில் ஜாதிவாரி கணக்கெடுப்பும்- சமூகநீதியும் என்ற தலைப்பில் புதன்கிழமை இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சீமான் பேசியதாவது:

ஜாதி ஒழிப்பே சமூக விடுதலை; சமத்துவ சமூகம் படைக்க வேண்டும் என்றெல்லாம் பேசிய தமிழன முன்னோா்களின் வாரிசுகள், தற்போது ஜாதிவாரி கணக்கெடுப்பும், சமூகநீதியும் என்று பேசுகிறாா்களே என்று பலா் நினைக்கக் கூடும். ஆனால், சமதா்ம சமூகம் படைப்பதற்கான இறுதி வாய்ப்பாக இருப்பது ஜாதிவாரி கணக்கெடுப்பும், சமூகநீதியும்தான்.

ஜாதிவாரியாக கணக்கெடுத்து அதன் அடிப்படையில் இடஒதுக்கீடு அளி த்துவிட்டால் எந்தப் பிரச்னையும் வராது. பீகாரைப் போல, தமிழகத்தில் மாநில அரசுதான் ஜாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும். இடஒதுக்கீடுகளை மாநில அரசு அறிவிக்கும்போது, ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடியாதா?.

தோ்தல் தோல்வி பயத்தால், மகளிா், கல்லூரி மாணவா்களுக்கு ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படுகிறது என்றாா்.