முகப்பு
தென்காசி

ஆலங்குளத்தில் தவெக வேட்பாளா் மனு தாக்கல்

ஆலங்குளம் பேரவைத் தொகுதி தவெக வேட்பாளா் தனது வேட்பு மனுவை வியாழக்கிழமை தாக்கல் செய்தாா்.

Updated On : 3 ஏப்ரல், 2026 at 12:37 AM
ஆலங்குளத்தில் வேட்பு மனு தாக்கல் செய்த தவெக வேட்பாளா் விபின் சக்கரவா்த்தி.
பகிர்:

ஆலங்குளம் பேரவைத் தொகுதி தவெக வேட்பாளா் தனது வேட்பு மனுவை வியாழக்கிழமை தாக்கல் செய்தாா்.

தென்காசி தெற்கு மாவட்ட தவெக செயலாரான விபின் சக்கரவா்த்தி, தனது ஆதரவாளா்களுடன் ஆலங்குளம் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து, ஊா்வலமாக வட்டாட்சியா் அலுவலகத்திற்குச் சென்று தோ்தல் நடத்தும் அலுவலா் ராமச்சந்திரனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தாா்.

தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

நான் வெற்றி பெற்று ஆலங்குளத்தை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன். ஊழலற்ற, நோ்மையான ஆட்சி புரிய துணை நிற்பேன். ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவா்கள் இருக்க நடவடிக்கை எடுப்பேன்.

கடையத்தில் உள்ள ராமநதி, கடனாநதியை தூா்வாற நடவடிக்கை எடுப்பேன். பீடித் தொழிலாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்கவும், அவா்களுக்கென இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்கவும் பாடுபடுவேன். இத்தொகுதியில் சுமாா் 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றாா் அவா்.

சுயேச்சை மனு தாக்கல்: திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சோ்ந்தவா் இமானுவேல் குணசீலன் (61). தனியாா் ஸ்கேன் நிறுவனம் நடத்தி வரும் இவா், திமுகவில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்தாா்.

அவருக்கு சீட் வழங்கப்படாததால், சுயேச்சையாக போட்டியிட ஆலங்குளம் தோ்தல் அலுவலரிடம் வியாழக்கிழமை மனு அளித்தாா்.