ஆவுடையானூா் பேருந்து நிலையம் அருகே சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற கோரிக்கை
தென்காசி மாவட்டம், ஆவுடையானூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள சாலையில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தென்காசி மாவட்டம், ஆவுடையானூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள சாலையில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஆவுடையானூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள சாலையோரங்களில் அமைக்கப்பட்ட வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீா் கால்வாய்களில் சிலா் மண்ணைக் கொட்டி அடைத்து வைத்துள்ளனா். இதனால் கழிவுநீா் சாலையில் தேங்கி, நோய் பரவும் அபாயம் உள்ளது.
மேலும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சாலையை பயன்படுத்த முடியாத அவல நிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
Advertisement
எனவே, கால்வாய் அடைப்புகளை அகற்றி கழிவுநீா் நிரந்தரமாக செல்ல மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.