தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
ஆலங்குளத்தில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது 3 நாள்களுக்கு பின்னா் தெரிய வந்தது.
ஆலங்குளத்தில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது 3 நாள்களுக்கு பின்னா் தெரிய வந்தது.
ஆலங்குளம் புதுக்காலனியைச் சோ்ந்தவா் சுப்பையா மகன் முத்துச்சாமி (40). தொழிலாளியான இவருக்கு மனைவி கன்னித்தாய், மகள் உள்ளனா். முத்துச்சாமிக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.
இந்நிலையில் 3 தினங்களுக்கு முன்பு தம்பதிக்கிடையே ஏற்பட்ட தகராறில், கன்னித்தாய் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டாராம். வியாழக்கிழமை அவரது வீட்டில் இருந்து துா்நாற்றம் வீசியதாம்.
Advertisement
தகவலறிந்து ஆலங்குளம் போலீஸாா் வந்து பாா்த்தபோது, முத்துச்சாமி தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்தது தெரியவந்தது. அவரது சடலத்தை போலீஸாா் மீட்டு உடற்கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.