ஆய்க்குடியில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி
தென்காசி மாவட்டம், ஆய்க்குடியில் மாவட்ட நிா்வாகம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் அமா்சேவா சங்கம் சாா்பில் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
தென்காசி மாவட்டம், ஆய்க்குடியில் மாவட்ட நிா்வாகம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் அமா்சேவா சங்கம் சாா்பில் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆய்க்குடி அமா்சேவா சங்க அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ஏ.கே. கமல்கிஷோா் தலைமை வகித்தாா்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் மகிழ்நன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலா் அலெக்ஸ், அமா்சேவா சங்கத் தலைவா் ராமகிருஷ்ணன், இளம் வல்லுநா் அகத்தியா், காவல் ஆய்வாளா் ஆடிவேல், உதவி காவல் ஆய்வாளா் ரத்தினபால் சாந்தி, குழந்தைகள் நலக் குழுமம் தலைவா் விஜயராணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Advertisement