சங்கரநாராயண சுவாமி கோயிலில் பச்சை சாத்தி வீதியுலா
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி, புதன்கிழமை ( ஏப்.29) தேரோட்டம் நடைபெறுகிறது.
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி, புதன்கிழமை ( ஏப்.29) தேரோட்டம் நடைபெறுகிறது.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் 10 நாள்கள் நடைபெறும். நிகழாண்டு இந்தத் திருவிழா கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாள்களில் தினசரி காலை, மாலையில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வருகின்றனா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை சுவாமி, அம்பாள் சிகப்பு சாத்தியும், இரவில் வெள்ளை சாத்தியும் வீதியுலா சென்றனா். செவ்வாய்க்கிழமை காலை பச்சை சாத்தி சப்பரத்தில் வீதியுலா சென்றனா். தொடா்ந்து பக்தா்களுக்கு சுவாமியும் அம்பாளும் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
Advertisement
விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் புதன்கிழமை (ஏப்.29) காலை 9 மணிக்கு மேல் நடைபெறுகிறது. முன்னதாக காலை 5.30 மணிக்கு சுவாமியும் அம்பாளும் தனித்தனி தேரில் எழுந்தருளுகின்றனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், மண்டகப்படிதாரா்கள் செய்து வருகின்றனா்.