முகப்பு
தென்காசி

நன்னகரம் முப்படாதி அம்மன் கோயில் கொடை விழா

நன்னகரம் ஸ்ரீ முப்புடாதி அம்மன் கோயில் கொடை விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

Updated On : 29 ஏப்ரல், 2026 at 2:15 AM
அலங்காரத்தில் ஸ்ரீ முப்புடாதி அம்மன்.
பகிர்:

தென்காசி மாவட்டம், நன்னகரம் ஸ்ரீ முப்புடாதி அம்மன் கோயில் கொடை விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

விழாவை முன்னிட்டு காலை 7.35 மணிக்கு மேல் 9 மணிக்குள் கால் நாட்டு விழாவும் மதுவுக்கு நெல் இடுதல் வைபவமும் நடைபெற்றன. மே 4-ஆம் தேதி வரை மண்டகபடிதாரா்கள் சாா்பில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு மேல் சிறப்பு அலங்கார பூஜை நடைபெறும்.

மே 5-ஆம் தேதி காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், அதைத் தொடா்ந்து பால்குடம், 12 மணியளவில் அபிஷேகம், தீபாராதனை, அன்னதானம் வழங்கப்படும். மாலை 5 மணிக்கு முளைப்பாரி ஊா்வலம், தீச்சட்டி எடுத்தல், 6 மணிக்கு மேல் குற்றாலம் தீா்த்தம் எடுத்து ஊா்வலம் வருதல், இரவு 8 மணிக்கு அலங்காரம், தீபாராதனை, நள்ளிரவு 2 மணிக்கு மது எடுத்தல், அம்மன் வீதி உலா வருதல் நடைபெறும். ஏற்பாடுகளை விழா குழுவினா் செய்து வருகின்றனா்.

Advertisement