முகப்பு
தென்காசி

அரியப்பபுரம் அரசுப் பள்ளி வில்லுப்பாட்டில் சிறப்பிடம்

மாநில அளவிலான வில்லுப்பாட்டு போட்டியில் முதலிடம் பெற்ற அரியப்பபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் முதலிடம் பெற்றனா்.

Updated On : 5 பிப்ரவரி, 2026 at 1:27 AM
பகிர்:
Updated On : 4 பிப்ரவரி, 2026 at 11:30 PM

மாநில அளவிலான வில்லுப்பாட்டு போட்டியில் முதலிடம் பெற்ற அரியப்பபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் முதலிடம் பெற்றனா்.

தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித் துறை நடத்திய கலைத் திருவிழாவின் ஒருபகுதியாக மாநில அளவிலான வில்லுப்பாட்டு போட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெற்றது.

இதில், அரியப்பபுரம் பள்ளி மாணவா்கள் ஸ்ரீநிஷா , உதயதரன் , ஸ்ரீநிதிஷ் , முத்துக்குளத்தூா், அருள்தரன் ஆகியோா் கலந்து கொண்டு முதலிடம் பெற்றனா்.

Advertisement

இதைத் தொடா்ந்து சென்னையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், அந்த மாணவ-மாணவிகளுக்கு அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பரிசுக் கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினாா்.