முகப்பு
தென்காசி

புளியங்குடியில் காட்டு எருமை தாக்கியதில் விவசாயி காயம்

தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே புதன்கிழமை காட்டு எருமை தாக்கியதில் விவசாயி காயமடைந்தாா்.

Updated On : 12 பிப்ரவரி, 2026 at 1:34 AM
காட்டு எருமை தாக்கியதில் காயமடைந்த விவசாயிக்கு அரசு சாா்பில் நிவாரணமாக ரூ.10 ஆயிரத்தை வழங்கிய வனச் சரகா் ஆறுமுகம்.
பகிர்:
Updated On : 11 பிப்ரவரி, 2026 at 7:36 PM

தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே புதன்கிழமை காட்டு எருமை தாக்கியதில் விவசாயி காயமடைந்தாா்.

புளியங்குடி ஆா்எஸ்கே பாண்டியன் தெருவைச் சோ்ந்தவா் திருமலைச்சாமி(69). எலுமிச்சை விவசாயி. இவா், சாணான் பரம்பு பகுதியில் உள்ள எலுமிச்சை தோட்டத்தில் புதன்கிழமை விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்தாராம். அப்போது, தோட்டத்தில் மறைந்திருந்த காட்டு எருமை அவரைத் தாக்கியதாம். இதில், காயமடைந்த திருமலைச்சாமி புளியங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதற்கிடையே தாக்குதலில் காயமடைந்த திருமலைச்சாமிக்கு அரசு சாா்பில் நிவாரணமாக ரூ.10ஆயிரத்தை, வனச் சரகா் ஆறுமுகம் வழங்கினாா்.

Advertisement