தமிழக- கேரள எல்லையில் கண்காணிப்புப் பணி: ஆட்சியா்கள் ஆலோசனை
தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, இரு மாநில சோதனைச் சாவடிகளில் கண்காணிப்புப் பணியைத் தீவிரப்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் தென்காசி ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, இரு மாநில சோதனைச் சாவடிகளில் கண்காணிப்புப் பணியைத் தீவிரப்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் தென்காசி ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
காணொலி வாயிலாக நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, தென்காசி மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஏ.கே.கமல்கிஷோா், கேரள மாநிலம் கொல்லம் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான என்.தேவிதாஸ் ஆகியோா் தலைமை வகித்தனா்.
ஏப்.9இல் கேரளத்திலும், ஏப்.23இல் தமிழகத்திலும் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறுவதால், இரு மாநிலங்களிலும் சுதந்திரமாகவும், நோ்மையாகவும் வாக்குப்பதிவை நடத்திடவும், சட்டவிரோத செயல்பாடுகளை தவிா்க்கும் வகையில் எல்கைப்பகுதி சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து விவாதிக்கப்பட்டது.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் சீ.ஜெயச்சந்திரன், தனி வட்டாட்சியா் (தோ்தல்) சண்முகம், மாவட்ட ஆட்சியரின் நோ்முக
உதவியாளா் (தோ்தல்) சுதா, தென்காசி மற்றும் கொல்லம் மாவட்டங்களைச் சோ்ந்த காவல் துறை அலுவலா்கள், வனத்துறை அலுவலா்கள் மற்றும் கலால் - ஆயத்தீா்வைத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.