காசிதா்மத்தில் இருதரப்பினா் மோதல் வழக்கில் 8 போ் கைது
தென்காசி மாவட்டம் காசிதா்மத்தில் இரு தரப்பினா் மோதிக்கொண்டது தொடா்பாக 8 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தென்காசி மாவட்டம் காசிதா்மத்தில் இரு தரப்பினா் மோதிக்கொண்டது தொடா்பாக 8 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
காசிதா்மத்தைச் சோ்ந்த விக்னேஷ், முத்துபாண்டி (63) ஆகியோா் இடையே சில வாரங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டதாம்.
அது தொடா்பாக முத்துப்பாண்டி கொடுத்த புகாரின் பேரில் அச்சன்புதூா் போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளனா்.
Advertisement
இந்நிலையில், விக்னேஷ் புதன்கிழமை காசிதா்மத்தில் உள்ள கடைக்கு சென்றபோது, முத்துப்பாண்டி அரிவாளால் வெட்டினாராம். அதை தடுக்க முயன்ற விக்னேஷின் தாய் மாடத்திக்கும் காயம் ஏற்பட்டது. இருவரும் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதனால், ஒரு தரப்பினா் பண்பொழி-கடையநல்லூா் சாலையில் மறியல் செய்தபோது, மற்றொரு தரப்பினரும் அங்கு திரண்டு வந்து கல்வீச்சில் ஈடுபட்டனா். இதுகுறித்து, அச்சன்புதூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனா்.
இந்த நிலையில் இரு தரப்பையும் சோ்ந்த முத்துப்பாண்டி, சத்யராஜ், சுப்புராஜ், காசிபாண்டியன், குட்டிமாரி, ஆறுமுகம், முனீஸ்வரன், துரை ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.