சிவகிரியில் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
சிவகிரியில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பெட்ரோல், டீசல், சிலிண்டா் விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகிரியில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பெட்ரோல், டீசல், சிலிண்டா் விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலா் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் வேலு, மாா்க்சிஸ்ட் ஒன்றியச் செயலா் நடராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாா்க்சிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினா் பாஸ்கரன் கண்டன உரையாற்றினாா்.
மாவட்டக் குழு உறுப்பினா்கள் சிங்காரவேலு, ராஜேந்திரன், கண்ணன், ஜோதிராமலிங்கம், ஜெயராஜ், அசோக் ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement