திருநெல்வேலி

குண்டர் சட்டத்தில் இளைஞருக்கு சிறை

DIN

திருநெல்வேலி மாநகரில் கொலை, கொலை முயற்சி, மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய இளைஞரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்க மாநகரக் காவல் துறை ஆணையர் கபில்குமார் சாரட்கர் உத்தரவிட்டுள்ளார்.
திருநெல்வேலி, பெருமாள்புரம் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டுவந்த ரெட்டியார்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் (22), தொடர்ந்து கொலை, கொலை முயற்சி, மிரட்டல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார். இதையடுத்து, அவரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்க உதவி ஆணையர் விஜயகுமார், பெருமாள்புரம் போலீஸார் பரிந்துரைத்தனர். அதை ஏற்று மணிகண்டனை குண்டர் சட்டத்தில் அடைக்க ஆணையர் கபில்குமார் சாரட்கர் சனிக்கிழமை உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

கனடா சாலை விபத்தில் இறந்த இந்திய தம்பதி அடையாளம் தெரிந்தது

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

SCROLL FOR NEXT