திருநெல்வேலி மாநகரில் கொலை, கொலை முயற்சி, மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய இளைஞரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்க மாநகரக் காவல் துறை ஆணையர் கபில்குமார் சாரட்கர் உத்தரவிட்டுள்ளார்.
திருநெல்வேலி, பெருமாள்புரம் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டுவந்த ரெட்டியார்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் (22), தொடர்ந்து கொலை, கொலை முயற்சி, மிரட்டல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார். இதையடுத்து, அவரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்க உதவி ஆணையர் விஜயகுமார், பெருமாள்புரம் போலீஸார் பரிந்துரைத்தனர். அதை ஏற்று மணிகண்டனை குண்டர் சட்டத்தில் அடைக்க ஆணையர் கபில்குமார் சாரட்கர் சனிக்கிழமை உத்தரவிட்டார்.