முகப்பு
திருநெல்வேலி

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

பாளையங்கோட்டையில் யாதவர் பண்பாட்டுக் கழகம் சார்பில், மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

பாளையங்கோட்டையில் யாதவர் பண்பாட்டுக் கழகம் சார்பில், மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்ட யாதவர் பண்பாட்டுக் கழகத்தின் செயற்குழுக் கூட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு,  அமைப்பின் தலைவர் எஸ். சண்முகசுந்தரம் தலைமை வகித்தார்.  பொருளாளர் கே. பாபநாசம் வரவு-செலவு அறிக்கை சமர்ப்பித்தார். தமிழ்நாடு யாதவ் கல்வி அறக்கட்டளைத் தலைவர் தங்கவேல்சாமி, தொழிலதிபர் மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொன்விழாவை சிறப்பாக நடத்திய அமைப்பின் நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பிளஸ் 2 பயிலும் சமுதாய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. இதில் உறுப்பினர்கள் இசக்கிமுத்து, செல்வராஜ், ராமகிருஷ்ணன், ஈனமுத்து, ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். செயலர் டி. ராமசாமி வரவேற்றார். துணைத் தலைவர் வி. சுப்பையா நன்றி கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →