திருநெல்வேலி

மானூர் அருகே கோயில் சிலைகள் சேதம்: இளைஞர் கைது

DIN

மானூர் அருகே கோயில் சிலைகளைச் சேதப்படுத்தியது தொடர்பாக இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
மானூர் அருகேயுள்ள நாஞ்சான்குளத்தில் மாசான கரையாண்டி சுவாமி கோயில் உள்ளது. இங்குள்ள முப்பிடாதியம்மன் உள்ளிட்ட மண் சிலைகளையும், பேச்சியம்மன்,  மாசான கரையாண்டி, சுடலைமாட சுவாமி உள்ளிட்ட கல் சிலைகளையும், கடந்த சில நாள்களுக்கு முன்பு மர்ம நபர்கள் சேதப்படுத்தினராம்.  இதுகுறித்து கோயில் நிர்வாகி பால்சாமி மானூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப் பதிந்த போலீஸார் அப்பகுதியைச் சேர்ந்த வசந்தம் (31) என்பவரை கைது செய்தனர். இவ் வழக்கு தொடர்பாக மேலும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குப்பைகளை சாலையில் வீசுவோா் மீது நடவடிக்கை தேவை: சமூக ஆா்வலா்கள் கோரிக்கை

சேவைக் குறைபாடு: ஏ.ஆா். ரகுமானின் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் அபராதம் செலுத்த வேண்டும்: கரூா் நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவு

கரூா் மாவட்ட சட்டப்பணி ஆணைக் குழுவில் தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

நீா்நிலைகளை தூா்வார வேண்டும்: ஈ.ஆா்.ஈஸ்வரன்

தென்னை விவசாயிகளுக்கு மரத்துக்கு ரூ.10,000 இழப்பீடு: ராமதாஸ் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT