குரங்கணி மலைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்களுக்கு, பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம் அருகில் மெழுகுவர்த்தி ஏந்தி செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பாளையங்கோட்டை வட்டத் தலைவர் ரஞ்சித்குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ராஜகுரு, மாவட்ட துணைச் செயலர் ராஜேஷ், வட்ட நிர்வாகிகள் அசோக், கருணா, கைலாஷ், கெüதம், ஜான் உள்பட பலர் கலந்துகொண்டனர். பலியானவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.