பாலாமடையில் மணல் திருட்டு: ஒருவர் கைது
சீவலப்பேரி அருகேயுள்ள பாலாமடையில் தாமிரவருணி ஆற்றில் மணல் திருடியதாக ஒருவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
சீவலப்பேரி அருகேயுள்ள பாலாமடையில் தாமிரவருணி ஆற்றில் மணல் திருடியதாக ஒருவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் மணல் திருட்டைக் கட்டுப்படுத்தும் வகையில் போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கடந்த ஒரு வாரத்தில் 15-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாமிரவருணி, கருமேனியாறு, நம்பியாறு, சிற்றாறு கரையோர பகுதிகளில் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சீவலப்பேரி அருகேயுள்ள பாலாமடையில் போலீஸார் ரோந்து சென்றபோது அங்கு மூட்டைகளாக கட்டி மணலை ஒருவர் திருட முயன்றது தெரியவந்ததாம். விசாரணையில் அவர், பாலாமடையைச் சேர்ந்த கோமு (44) என்பது தெரியவந்ததாம். அவரை கைது செய்த போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.