திருநெல்வேலி

பாளை.யில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

DIN

பாளையங்கோட்டையில் நடந்து சென்ற பெண்ணிடம் 1.5 பவுன் தங்கநகையைப் பறித்துச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.
பாளையங்கோட்டை அருகேயுள்ள ராஜாகுடியிருப்பைச் சேர்ந்த மாரியப்பன் மகள் கார்த்திகா (22). திருநெல்வேலி சந்திப்பில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஊழியராகப் பணியாற்றி வந்தார். கார்த்திகா பணிக்குச் செல்வதற்காக வியாழக்கிழமை மாலை நடந்து சென்று கொண்டிருந்தாராம். 
மூளிக்குளம் குளக்கரையில் வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் கார்த்திகா கழுத்தில் அணிந்திருந்த 1.5 பவுன் தங்கச்சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பியோடினர். இதுகுறித்த புகாரின்பேரில் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

மகாதேவ் செயலி மோசடி: 4 நாள்களில் 6 மாநிலங்கள் பயணித்த சாஹில் கான்

வேட்புமனுவை திரும்பப் பெற்று பாஜகவில் இணைந்த காங். வேட்பாளர்!

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது

SCROLL FOR NEXT