திசையன்விளையில் ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி ஊர்வலம்
திசையன்விளையில் ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி விழா ஊர்வலம் நடைபெற்றது.
திசையன்விளையில் ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி விழா ஊர்வலம் நடைபெற்றது.
கிருஷ்ண ஜயந்தியையொட்டி, செல்வமருதூர் பெரியம்மன் கோயிலில் இருந்து ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி வரை நடைபெற்ற ஊர்வலத்தில், 100-க்கும் மேற்பட்ட சிறுவர்- சிறுமியர் ஸ்ரீகிருஷ்ணர் மற்றும் ராதை வேடமிட்டு பங்கேற்றனர்.
தொடர்ந்து, அப்பள்ளியில் ஸ்ரீகிருஷ்ணர் பற்றிய சிறுவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. அவல், லட்டு உள்ளிட்ட பலகாரங்கள் சிறுவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சேவா பாரதி தென்மண்டல அமைப்பாளர் முத்துச்செல்வி, திசையன்விளை அனைத்து வியாபாரிகள் சங்க பேரமைப்புத் தலைவர் சாந்தகுமார், டி.பி.சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சேவா பாரதி அமைப்பினர் செய்திருந்தனர்.