திருநெல்வேலி

அண்ணா பிறந்தநாள்: சிலைக்கு கட்சியினர் மாலை அணிவிப்பு

DIN


பேரறிஞர் அண்ணாவின் 110 ஆவது பிறந்த தினத்தையொட்டி, திருநெல்வேலியில் அண்ணா சிலைக்கு அதிமுக, திமுக, அமமுக, மதிமுகவினர் சனிக்கிழமை மாலை அணிவித்தனர்.
சந்திப்பிலுள்ள அண்ணா சிலைக்கு மாவட்டச் செயலர் தச்சை ந. கணேசராஜா தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்தனர். இதில், மாநிலங்களவை உறுப்பினர் எஸ். முத்துக்கருப்பன், மக்களவை உறுப்பினர்கள் வசந்தி முருகேசன், கே.ஆர்.பி. பிரபாகரன், கட்சியின் அமைப்புச் செயலர் சுதா கே. பரமசிவன், அவைத் தலைவர் பரணி ஏ. சங்கரலிங்கம், பகுதிச் செயலர்கள் கே. மாதவன், என். மோகன், கிருஷ்ணமூர்த்தி, எஸ்.எஸ். ஹயாத், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் தர்மலிங்கம், கோபாலகிருஷ்ணன், இளைஞர் பாசறை முன்னாள் செயலர் மு. ஹரிஹரசிவசங்கர், அக்ரோ சேர்மன் அ. மகபூப்ஜான், முன்னாள் மாவட்டச் செயலர் செந்தில்ஆறுமுகம், ஜெயலலிதா பேரவைச் செயலர் இ. நடராஜன், நான்குனேரி ஒன்றியச் செயலர் விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கட்சியின் தணிக்கைக் குழு உறுப்பினர் சுப. சீதாராமன் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்தனர். இதில், முன்னாள் மேயர் மு. உமாமகேஸ்வரி, மாவட்டத் துணைச் செயலர் ஆ.க. மணி, மாநகர அவைத் தலைவர் வேலு என்ற சுப்பையா, மாநகர துணைச் செயலர் வள்ளியம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், மாவட்டச் செயலர் கல்லூர் இ. வேலாயுதம் தலைமையில், அவைத் தலைவர் பூ. ஜெகநாதன், மாவட்டத் துணைச் செயலர் எம்.சி. ராஜன், மாநில ஜெயலலிதா பேரவை இணைச் செயலர் ச. பரமசிவஐயப்பன், பகுதிச் செயலர் அசன்ஜாபர்அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மதிமுக சார்பில், மாவட்ட தொழிற்சங்கச் செயலர் சுத்தமல்லி நடராஜன் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுதாபம் பெற கேஜரிவால் மீது ‘ஆம் ஆத்மி’ தாக்குதல் நடத்தலாம்: வீரேந்திர சச்தேவா

நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை

கிருஷ்ணகிரி அணையில் செத்து மிதக்கும் மீன்கள்

பிரதோஷ சிறப்பு வழிபாடு

பரமத்தி வேலூா் ஏலச்சந்தையில் வெற்றிலை விலை உயா்வு

SCROLL FOR NEXT