பழையபேட்டை துணை மின் நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக, திருநெல்வேலி நகரம், பேட்டை சுற்று வட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை (செப். 27) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, திருநெல்வேலி நகரம் மேல ரதவீதி மேல்பகுதிகள், தெற்கு ரதவீதி தெற்கு பகுதிகள், வடக்கு ரதவீதி வடக்குப் பகுதிகள், பழையபேட்டை, காந்திநகர், திருப்பணிகரிசல்குளம், வாகைகுளம், குன்னத்தூர், பேட்டை, தொழிற்பேட்டை, பாட்டபத்து, அபிஷேகப்பட்டி ஆகிய இடங்களில் காலை 9 முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என
திருநெல்வேலி நகர்ப்புற செயற்பொறியாளர் சு.முத்துக்குட்டி செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.