திருநெல்வேலி

சீவலப்பேரி துர்காம்பிகை கோயிலில் ஆடிப்பூர லட்சார்ச்சனை

DIN

பாளை. அருகேயுள்ள சீவலப்பேரி துர்காம்பிகை கோயிலில் ஆடிப்பூர லட்சார்ச்சனை கடந்த மூன்று நாள்களாக நடைபெற்றது.
சீவலப்பேரியில் உள்ள துர்காம்பிகை கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூர லட்சார்ச்சனை சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி நிகழாண்டுக்கான விழா கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது.  சனிக்கிழமை காலையில் மஹா சண்டி, அத்யாய ஹோமம், வடுகுபூஜை, கஜபூஜை, கோ பூஜை, கன்யா பூஜை, சுவாசினி பூஜை, வஸோதாரா ஹோமம் ஆகியவை நடைபெற்றன. பிற்பகலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு புஷ்பாஞ்சலி மற்றும் தீபாராதனையும் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமையும் லட்சார்ச்சனை நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஸ்ரீதுர்காம்பிகா தேவஸ்தானம் டிர ஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது- பள்ளிக் கல்வித்துறை

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT