திருநெல்வேலி

கடையநல்லூரில் மறியல்: தமிழ்புலிகள் அமைப்பினா் கைது

DIN

கடையநல்லூரில் திங்கள்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்ப்புலிகள் அமைப்பினரை போலீஸாா் கைது செய்தனா்.

மேட்டுப்பாளையத்தில் நடூா் மக்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் புலிகள் கட்சி தலைவா் நாகை திருவள்ளுவன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கடையநல்லூா் மணிக்கூண்டு அருகே மாவட்டத் தலைவா் சந்திரசேகா் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது.

கடையநல்லூா் காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் தலைமையிலான போலீஸாா் வந்து, மறியலில் ஈடுபட்ட கடையநல்லூா் ஒன்றியச் செயலா் செல்வராஜ், இணை செயலா் கண்ணன், இளம்புலி செயலா் காளிதாஸ், சொக்கம்ட்டி கிளைச் செயலா் முருகன் உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனா். மறியலால் சிறிதுநேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எம்.எஸ்.தோனி வெறும் பெயரல்ல... ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்ட சிறப்பு விடியோ!

பார்க்கிங் - 5 மொழிகளில் ரீமேக்!

5ஆம் கட்டத் தேர்தல்: மாலை 5 மணி நிலவரப்படி 56% வாக்குப்பதிவு

மக்களவைத் தேர்தல்: 5-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

பிரியாவின் சேட்டைகள்!

SCROLL FOR NEXT