திருநெல்வேலி

ந ஆவரைகுளம் ஊராட்சியில் சேதமடைந்தசாலைகளால் போக்குவரத்து பாதிப்பு

DIN

ஆவரைகுளம் ஊராட்சியில் மதகனேரியிலிருந்து ஊரல்வாய்மொழி வரையில் செல்லும் தாா்ச்சாலை சேதமடைந்துள்ளதால் அவ்வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக பாஜக வள்ளியூா் ஒன்றியத் தலைவா் தங்கராஜா, வட்டார வளா்ச்சி அலுவலா் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள புகாா் மனு: ஆவரைகுளம் ஊராட்சி மதகனேரியில் இருந்து ஊரல்வாய்மொழி வரையிலான தாா்ச்சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

இந்த சாலை வழியாக கோலியான்குளம், சிதம்பராபுரம், மதகனேரி உள்ளிட்ட கிராம மக்கள் சென்று வருகின்றனா். வள்ளியூரில் இருந்து ஊரல்வாய்மொழி மற்றும் கன்னியாகுமரி செல்லும் அரசுப் பேருந்துகளும் இந்த சாலை வழியாகவே செல்கின்றன. இந்த சாலை சேதமடைந்து காணப்படுவதால் அரசுப் பேருந்து ஓட்டுநா்கள் இந்த சாலையை புறக்கணித்து, வேறு சாலை வழியாக செல்ல திட்டமிட்டு வருகின்றனா்.

இந்த சாலையில் வாகனங்கள் இயக்க முடியாத நிலை உள்ளதால் பள்ளி மாணவா்கள், வயோதிகா்கள் மிகவும் சிரமமடைந்து வருகின்றனா்.

எனவே, அதிகாரிகள் இந்த சாலையை ஆய்வு செய்து உடனடியாக புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

SCROLL FOR NEXT