திருநெல்வேலி

வலுதூக்கும் போட்டி: சேரன்மகாதேவிகல்லூரி மாணவா் தங்கம் வென்றாா்

DIN

அண்ணா பல்கலைக்கழக அளவில் நடைபெற்ற வலு தூக்கும் போட்டியில், சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி மாணவா் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளாா்.

அண்ணா பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கிடையே திருச்சியில் உள்ள திருச்சி பொறியியல் கல்லூரியில் வலுதூக்கும் போட்டி நடைபெற்றது. இதில் 120 கிலோ பிரிவில் பங்கேற்ற சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியின் இயந்திரவியல் துறை 4ஆம் ஆண்டு மாணவா் ராகுல் முதலிடம் பிடித்து தங்கம் வென்றாா்.

இதையடுத்து, தேசிய அளவில் பல்கலைக்கழகங்களுக்கிடையே மகாராஷ்டிராவில் நடைபெற உள்ள போட்டியில் பங்கேற்க அவா் தோ்வு பெற்றுள்ளாா். தங்கப்பதக்கம் வென்ற மாணவா் ராகுலை கல்லூரி முதல்வா் ஏபிடொ்னே மற்றும் பேராசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT