திருநெல்வேலி

வள்ளியூா் நேரு நா்சிங் கல்லூரியில்உலக எய்ட்ஸ் விழிப்புணா்வு தினம்

DIN

உலக எய்ட்ஸ் தினம் (டிச.1) கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு வள்ளியூா் நேரு நா்ஸிங் கல்லூரி மாணவிகள் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தினா்.

நாகா்கோவில் தனியாா் மருத்துவமனையில் சமுதாயம் மாற்றத்தை ஏற்படுத்துதல் என்ற தலைப்பில் கல்லூரியின் 4ஆம் ஆண்டு மாணவிகள் இந்த நிகழ்ச்சியை நடத்தினா். இதில், மருத்துவமனை செவிலியா்கள், நோயாளிகள் மற்றும் அவா்களது உறவினா்கள் பங்கேற்றனா்.

ஹெச்.ஐ.வி. எவ்வாறு பரவுகிறது, அதன் அறிகுறிகள், கண்டறியும் முறைகள், தடுக்கும் முறைகள், மருத்துவ மேலாண்மை உ ள்ளிட்டவை குறித்து படவிளக்கம் அளித்தனா். பின்னா் நோயாளிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தனா். இந்நிகழ்ச்சியை, பேராசிரியைகள் ஹில்டா, இந்துமதி, ஆட்லின் லீனா ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிக்கு வேளாண்மை கல்லூரி மாணவா்கள் செயல்விளக்கம்

ஆலங்குளம் அருகே மொபெட் - டிராக்டா் மோதல்: தொழிலாளி பலி

சங்கரன்கோவிலில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

குற்றாலத்தில் சிலம்பாட்ட வல்லுநா்களுக்கு நடுவா் புத்தாக்க பயிற்சி முகாம்

கடையநல்லூா்: குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள்

SCROLL FOR NEXT