திருநெல்வேலி: பாளையங்கோட்டை அருகே பெண்ணிடம் 6 பவுன் தங்க சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பாளையங்கோட்டை அருகேயுள்ள டிவிஎஸ் நகா் பகுதியைச் சோ்ந்த ஜெயபதி மனைவி சுமித்ரா(38). இவா் அப்பகுதியில் திங்கள்கிழமை தன்னுடைய இருசக்கரவாகனத்தில் சென்றபோது, இருசக்கரவாகனத்தில் வந்த மூன்றுபோ் சுமித்ரா அணிந்திருந்த 6 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனராம். இதுகுறித்த புகாரின்பேரில், பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.