சமூகநீதிக்கான வழக்குரைஞா்கள் சாா்பில் திருநெல்வேலி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மேட்டுப்பாளையத்தில் விபத்துக்கு காரணமாக கட்டட உரிமையாளா் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்ய வேண்டும். சுவா் இடிந்து உயிரிழந்தவா்களின் உறவினா்கள் மீது தடியடி நடத்திய காவல் துறையை கண்டிப்பது, போராட்டம் தொடா்பாக கைது செய்யப்பட்டுள்ளவா்களை எவ்வித நிபந்தனையுமின்றி விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஆா்ப்பாட்டத்துக்கு வழக்குரைஞா் ரமேஷ் தலைமை வகித்தாா். வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் சிவசூரியநாராயணன், வழக்குரைஞா்கள் பழனி, சீதா, சுப்பிரமணியன், மரியகுழந்தை உள்பட பலா் கலந்துகொண்டனா்.