திருநெல்வேலி

ராஜகோபால சுவாமி கோயிலில் ரத சப்தமி உற்சவம்

DIN

பாளையங்கோட்டை அருள்மிகு அழகியமன்னார் ராஜகோபால சுவாமி கோயிலில் 5ஆவது ஆண்டு ரத சப்தமி உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி காலையில் விஸ்வரூபம், திருவாராதனம் நடைபெற்றது. தொடர்ந்து சூரியபிரபை, கருடன், சேஷ வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதியுலா வந்தார். நண்பகலில் சுவாமிக்கு திருமஞ்சனம், கோஷ்டி சாத்துமுறை, தீர்த்த பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. மாலையில் இந்திர விமானத்தில் சுவாமி எழுந்தருளினார். 
பின்னர் அனுமன், அன்ன வாகனங்களில் மலர் அலங்காரத்தில் எழுந்தருளியும், இரவில் சூரியபிரபை வாகனத்தில் எழுந்தருளியும் வீதியுலா வந்தார். விழாவையொட்டி காலை முதல் இரவு வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு: வாலிநோக்கம் கடற்கரையில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரிக்கை

ராமேசுவரம், திருவாடானையில் பலத்த மழை

அனுமதியின்றி மாட்டு வண்டிப் பந்தயம், மஞ்சுவிரட்டு : 10 போ் மீது வழக்கு

66 கட்டடங்களை அப்புறப்படுத்த குறிப்பாணை

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பு

SCROLL FOR NEXT