திருநெல்வேலி-செங்கோட்டை பயணிகள் ரயில் சேரன்மகாதேவியில் பழுதாகி நின்றதால் சுமார் 2 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
திருநெல்வேலி-செங்கோட்டை இடையே காலை 7.15, 9.25, பிற்பகல் 1.50, மாலை 6.25 மணிக்கு பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. அதே நேரத்தில் மறுமார்க்கத்தில் இருந்தும் ரயில்கள் புறப்படுகின்றன. இவை அம்பாசமுத்திரம் ரயில் நிலையத்தில் கடவுப்பாதையில் கடந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை திருநெல்வேலியிலிருந்து புறப்பட்ட ரயில் சேரன்மகாதேவி சென்றபோது என்ஜின் பழுதானது. ரயில்வே ஊழியர்கள் முயன்றும் உடனடியாக பழுதை சரிசெய்ய முடியவில்லை. இதையடுத்து மறுமார்க்கத்தில் வந்து கொண்டிருந்த செங்கோட்டை-திருநெல்வேலி பயணிகள் ரயிலின் என்ஜின் வரவழைக்கப்பட்டு, சுமார் 2 மணி நேரம் தாமதமாக இரவு 9 மணிக்கு சேரன்மகாதேவியிலிருந்து செங்கோட்டைக்கு ரயில் புறப்பட்டது. அதேபோல் திருநெல்வேலியிலிருந்து மாற்று என்ஜின் அம்பாசமுத்திரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து பயணிகள் ரயில் திருநெல்வேலிக்கு சுமார் 2.30 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.