திருநெல்வேலி சந்திப்பில் உள்ள மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர் மன்றம் சார்பில் நற்பொழிவு என்ற பெயரில் 2 நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களில் 10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 650 மாணவர்கள் எழுதவுள்ளனர். அவர்களுக்காக நடைபெற்ற இந்த கருத்தரங்கில் திருவண்ணாமலை ஜெ.ராமமூர்த்தி கலந்து கொண்டு பேசினார். பள்ளித் தலைமையாசிரியர் சு.வேல்முருகன் வரவேற்றார். மூத்த ஆசிரியர் ராஜேந்திரன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை முன்னாள் மாணவர் மன்ற உறுப்பினர் ஹரிஹரகார்த்திகேயன் செய்திருந்தார்.
விழாவில், ரா.சிவக்குமார், ஆசிரியர்கள் சோமசுந்தரம், ராஜகோபால், உலகநாதன், பகவதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.