திருநெல்வேலி

செங்கோட்டை அரசு மருத்துவமனையில் ரூ.6 லட்சத்தில் சுற்றுச் சுவர்

DIN

செங்கோட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் கடையநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின்  கீழ் ரூ. 6 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட சுற்று சுவர் கட்டட திறப்பு விழா  நடைபெற்றது.
பேரவை உறுப்பினர் கேஎம்ஏ. முகம்மதுஅபூபக்கர் தலைமை வகித்தார். அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர்   ராஜேஸ்கண்ணன்,  சித்த மருத்தவர் கலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுற்று சுவர் கட்டடத்தை  எம்எல்ஏ கேஎம்ஏ. முகம்மதுஅபூபக்கர் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் திமுக நகரச் செயலர் எஸ்எம்.ரஹீம்,  மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஆ.வெங்கடேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் லிங்கராஜ்,  நகரத்துணைச் செயலர் குட்டிராஜா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நகரத்தலைவர் சலீம், செயலர் பஷீர் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆய்வக நுட்பநர் ஹரிஹரநாராயணன் வரவேற்றார்.  மருந்தாளுனர் அப்பாஸ்மீரான் நன்றி கூறினார். 
தொடர்ந்து,  திமுக மாவட்ட மகளிரணி துணைச் செயலர் மேரியின் கணவர் அந்தோணிராஜ் மறைவிற்கு,  அவரது இல்லத்திற்கு எம்எல்ஏ சென்று  ஆறுதல் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி போலீஸில் ரேவந்த் ரெட்டி இன்று ஆஜராகமாட்டார்?

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

தமிழ்நாட்டு வீரர்கள் மீது பிசிசிஐ-க்கு பாரபட்சம் ஏன்? பத்ரிநாத்

SCROLL FOR NEXT