திருநெல்வேலி

வியாபாரிகள் முன்னேற்ற பாதுகாப்பு சங்கக் கூட்டம்

DIN

நெல்லை வியாபாரிகள் முன்னேற்ற பாதுகாப்பு சங்க நிர்வாகக் குழுக் கூட்டம் திருநெல்வேலி நகரத்தில் நடைபெற்றது. 
சங்கத் தலைவர் கே.முஹம்மது யூசுப் தலைமை வகித்தார். கௌரவ ஆலோசகர் மை.சம்சுதீன், துணைச் செயலர் டி.ஐவஹர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலர் கே.ரவிகுமார் வரவேற்றார். திருநெல்வேலி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் ஆனி பெருந்திருவிழா தேரோட்ட நிகழ்ச்சி நாளன்று, நகரத்தில் உள்ள வணிகர்கள் அனைவரும் கடைகளுக்கு விடுமுறை வழங்கி, கடைகளுக்கு முன் உள்ள பொருள்களை அப்புறப்படுத்தி தேரோட்டத்துக்கு உதவ வேண்டும்.
திருநெல்வேலி நகரத்தில் உள்ள மவுன்ட் சாலையில் கட்டப்படும் 2 பாலப் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும்.  டீசல், பெட்ரோலுக்கான வரி உயர்வை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், துணைச் செயலர்கள் எம்.எஸ்.கான்முஹம்மது, கே.சுப்பையா, துணைத் தலைவர்கள் ஏ.கே.எஸ் முஹம்மது ஹனீபா, நிர்வாகக் குழு உறுப்பினர்கள் எஸ்.லட்சுமணன், ஏ.செய்யது அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

SCROLL FOR NEXT