கடையநல்லூர் அருகே சனிக்கிழமை கார் , ஆட்டோ, பைக் மோதியதில் 5 பேர் பலத்த காயம டைந்தனர்.
கடையநல்லூரில் இருந்து புளியங்குடி நோக்கிச் சென்ற ஆட்டோவும், சென்னையிலிருந்து பொட்டல்புதூர் நோக்கி சென்று கொண்டிருந்த காரும், கிருஷ்ணாபுரத்தில் இருந்து சென்று கொண்டிருந்த பைக்கும், குமந்தாபுரம் வளைவில் மோதியதாம்.
இந்த விபத்தில் காரில் வந்த சென்னை, தண்டையார்பேட்டை , பட்டேல்நகரைச் சேர்ந்த அப்துல்வஹாப் மனைவி ஹைருன்னிஸா(48) காயமடைந்தார். காரில் ஏர்பேக் செயல்பட்டதால் காரில் பயணித்த மற்ற 4 பேரும் காயம் இன்றி தப்பித்தனர்.
மேலும், மேலக்கடையநல்லூர் இந்திராநகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தட்சணாமூர்த்தி(38) , பைக்கை ஓட்டி வந்த கிருஷ்ணாபுரம் மிட்டா ஆபிஸ் தெருவைச் சேர்ந்த கல்யாணி, ஆட்டோவில் பயணித்த லட்சுமியூர் தங்கம்மாள் ( 50) , இடைகால் ரம்யா(34) ஆகியோரும் காயமடைந்தனர். காயமடைந்த தட்சணாமூர்த்தி, ஹைருன்னிஸா, தங்கம்மாள் ஆகியோர் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து கடையநல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.