திருநெல்வேலி

மாவட்ட நுகர்வோர்  விழிப்புணர்வு  இயக்க கூட்டம்

DIN

மாவட்ட நுகர்வோர் விழிப்புணர்வு இயக்க கூட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்றது.
இயக்கத் தலைவர் எஸ்.ஆர்.அனந்தராமன் தலைமை வகித்தார். பொருளாளர் அ.பாலசுப்பிரமணியன், இளங்கோ, சிற்பி பாமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் வானுவாமலை வரவேற்றார். 
கூட்டத்தில், பல்வேறு நாடுகளின் வளர்ச்சி, இந்தியாவில் வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள் வரக்காரணம் உள்ளிட்டவை குறித்து இயக்கத் தலைவர் பேசினார். 
முறையற்ற வணிக நடைமுறை, நுகர்வோர் குறைதீர் மன்ற வழக்குகள், தீர்வுகள் உள்ளிட்டவை குறித்து பொதுச் செயலர் கணபதி சுப்பிரமணியம் பேசினார். கூட்டத்தில், ஐஐபிஇ பள்ளி இயக்குநர் தனலெட்சுமி, மாவட்ட மைய நூலகர் அ.முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். துணைச் செயலர் சு.முத்துசாமி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT