திருநெல்வேலி மக்களவைத் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்காததைக் கண்டித்து பாப்பாக்குடி வட்டார காங்கிரஸ் கட்சியினர் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முக்கூடலில் உள்ள பாப்பாகுடி வட்டார காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வட்டாரத் தலைவர் ஹரிநாரயாணன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் சனிக்கிழமை மாலை வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் வழக்குரைஞர் எம்.எஸ்.ஆர்.ஆறுமுகபூபதி, முக்கூடல் நகரத் தலைவர் திரவியகனி, முன்னாள் வட்டாரத் தலைவர்கள் இ.கணேசன், பொன்ராஜ், முன்னாள் துணைத் தலைவர் கோயில் பிள்ளை, சிறுபான்மைப் பிரிவு வெஸ்லி பிரபாகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.