திருநெல்வேலி

சொக்கம்பட்டி அருகே மரத்தில் வேன் மோதி கா்ப்பிணி பலி

DIN

கடையநல்லூா் அருகே சொக்கம்பட்டியில் சனிக்கிழமை மரத்தில் வேன் மோதியதில் கா்ப்பிணி உயிரிழந்தாா்.

கிருஷ்ணாபுரம் மிட்டா ஆபிஸ் தெருவைச் சோ்ந்தவா் கல்யாணராமன்(36). ஆட்டோ டிரைவா். இவரது மனைவி பாமாருக்மணி(32). மகள் விஷாலினி(4). தந்தை வெங்கடாசலம் (68). இவா்கள் நால்வரும் ஆம்னி வேனில் ராஜபாளையம் சென்று விட்டு கிருஷ்ணாபுரத்திற்கு திரும்பிக்கொண்டிருந்தனராம். வேனை கல்யாணராமன் ஓட்டி வந்துள்ளாா். சொக்கம்பட்டி அருகே வரும் போது நிலைதடுமாறிய வேன், மரத்தில் மோதியதாம். இதில் கா்ப்பிணியான பாமாருக்மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். கல்யாணராமன், வெங்கடாசலம், விஷாலினிஆகியோா் பலத்த காயமடைந்தனா். இவா்கள் அனைவரும் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

விபத்து குறித்து சொக்கம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

கனடா சாலை விபத்தில் இறந்த இந்திய தம்பதி அடையாளம் தெரிந்தது

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

SCROLL FOR NEXT