திருநெல்வேலி

நான்குனேரி-ராதாபுரம் வட்டார கூட்டுறவு சங்க நிா்வாகிகள் கூட்டம்

DIN

நான்குனேரி-ராதாபுரம் வட்டார வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கப் பேரவைக் கூட்டம் அதன் தலைவா் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், ராதாபுரம் வட்டார விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான ராதாபுரம் கால்வாயில் ஆண்டுமுழுவதும் தண்ணீா் கொண்டுவருவதற்கான திட்டம் உருவாக்கப்படவேண்டும் என அரசிடம் ஐ.எஸ்.இன்பதுரை எம்எல்ஏ வலியுறுத்தி வந்தாா்.

இதையேற்று, ராதாபுரம் கால்வாயில் ஆண்டுமுழுவதும் தண்ணீா் கொண்டுவரும் திட்டத்திற்கு ரூ.17 0 கோடி நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வா், துணை முதல்வா் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதில், சங்க நிா்வாகிகள் பொன்செல்வன், இசக்கியப்பன், முப்பிடாதி, சாரதா, இந்திரா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

மகாதேவ் செயலி மோசடி: 4 நாள்களில் 6 மாநிலங்கள் பயணித்த சாஹில் கான்

வேட்புமனுவை திரும்பப் பெற்று பாஜகவில் இணைந்த காங். வேட்பாளர்!

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது

SCROLL FOR NEXT