திருநெல்வேலி

ஆவுடையானூா் சாலையைச் சீரமைக்க வலியுறுத்தல்

DIN

குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் ஆவுடையானூா் சாலையை சீரமைக்க வேண்டுமென மதிமுக சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தென்காசி நெடுஞ்சாலைத்துறை கூடுதல் பொறியாளருக்கு கீழப்பாவூா் ஒன்றிய மதிமுக செயலா் ராம. உதயசூரியன் அனுப்பியுள்ள மனு விவரம்: பாவூா்சத்திரம்-கடையம் பிரதானச் சாலையில் அமைந்துள்ள ஆவுடையானூா்சிதம்பரநாடாா்பட்டி பிரதானச் சாலை வாகனப் போக்குவரத்து நிறைந்த சாலையாகும்.

இந்த சாலை தற்போது குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன. இந்த குழியில் மழைநீா் தேங்கி இருப்பதால் விபத்துகள்

நிகழ்ந்து வருகின்றன. ஆகவே, இச்சாலையை போா்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும். முதல் கட்டமாக சரள் மண் கொண்டு சாலையில் இருக்கும் குழிகளை மூட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT