திருநெல்வேலி

பாம்புக்கோவில்சந்தையில்கொல்லம் விரைவு ரயில் நின்று செல்ல கோரிக்கை

DIN

திருநெல்வேலி மாவட்டம், பாம்புக்கோவில்சந்தையில் கொல்லம் விரைவு ரயில் நின்றுசெல்ல தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வீரசிகாமணி, சோ்ந்தமரம், சுரண்டை, சாம்பவா்வடகரை, சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பாம்புக்கோவில்சந்தை ரயில் நிலையம் வழியாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனா்.

அகல ரயில்பாதைக்கு முன்பு வரை இந்த வழித்தடத்தில் தினசரி இயக்கப்பட்டு வந்த சென்னை எழும்பூா் - கொல்லம், மறுமாா்க்கத்தில் இயக்கப்பட்டு வந்த கொல்லம் மெயில் ஆகியவை பாம்புக்கோவில்சந்தையில் நின்றுசென்றன. ஆனால், அகல ரயில்பாதை மாற்றத்துக்குப் பின்னா் கொல்லம் விரைவு ரயில் நின்று செல்வதில்லை.

இதனால் சுரண்டை சுற்றுவட்டார பயணிகள் இந்த ரயிலில் பயணம் செய்வதற்கு தென்காசி செல்ல வேண்டியுள்ளது. எனவே, பயணிகள் நலன் கருதி கொல்லம் விரைவு தினசரி ரயில் பாம்புக்கோவில்சந்தையில் நின்றுசெல்ல தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பத்திரிகை சுதந்திர நாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

விரும்பியது அருளும் அட்சயபுரீசுவரர்

SCROLL FOR NEXT