திருநெல்வேலி

தாமிரவருணியில் கட்டப்படும் குடிநீர் திட்ட பாலம் சேதம்

DIN

திருநெல்வேலி கருப்பந்துறையில் தாமிரவருணியின் குறுக்கே குடிநீர்த்  திட்டத்தின் குழாய்  பதிப்பதற்காக கட்டப்பட்டு வரும் புதிய பாலத்தின் ஒரு பகுதி வியாழக்கிழமை இடிந்து சேதமானது.
மேலப்பாளையம் அருகே மேலநத்தம்-கருப்பந்துறை இடையே தாமிரவருணி ஆற்றின் குறுக்கே கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளுக்காக குடிநீர் குழாய் அமைக்க சிறிய பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதில் பெருமளவில் பணிகள் முடிந்த நிலையில் மேற்குப்பகுதியில் கான்கிரீட்  அமைக்கும் பணி அண்மையில் நடைபெற்றது. இந்நிலையில் அந்த கான்கிரீட் போட்ட பகுதி வியாழக்கிழமை திடீரென இடிந்து சேதமானது. அதிருஷ்டவசமாக அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் உயிர் தப்பினர். தகவலறிந்த போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT