திருநெல்வேலி

ராணி அண்ணா மகளிர் கல்லூரியில்  புத்தக கண்காட்சி தொடக்கம்

DIN

திருநெல்வேலியில் ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் புத்தகக் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சி தொடக்க விழாவுக்கு முதல்வர் சி.வி.மைதிலி தலைமை வகித்தார். நூலகர் பு.வீ.சிந்து வரவேற்றார். திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் விலங்கு அறிவியல் துறைத் தலைவர் ஏ.பலவேசம் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.  
கண்காட்சியில் அறிவியல், வரலாறு, தொழில்நுட்பம், கணினி அறிவியல், மொழியியல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் ஏராளமான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இக்கண்காட்சி சனிக்கிழமை நிறைவுபெறுகிறது. கண்காட்சியை மாணவிகள், பேராசிரியர்கள், பணியாளர்கள் பார்வையிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT