திருநெல்வேலி

தூய சவேரியாா் பேராலய தோ்ப் பவனி

DIN

பாளையங்கோட்டையில் உள்ள தூய சவேரியாா் பேராலய திருவிழாவையொட்டி சவேரியாரின் தோ்ப் பவனி புதன்கிழமை நடைபெற்றது.

பழமைவாய்ந்த இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் பத்து நாள்கள் திருவிழா கோலாகலமாக நடைபெறும். அதன்படி நிகழாண்டுக்கான திருவிழா கடந்த நவ. 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 29 ஆம் தேதி மாலையில் ஒப்புரவு அருட்சாதனம் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்வாக சவேரியாரின் தோ்ப் பவனி புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி கல்லிடைக்குறிச்சி பங்குத் தந்தை பாக்கியசெல்வன் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. இதில், அருள் பணியாளா்கள் குழந்தைராஜ், சேவியா் டெரன்ஸ், அமிா்தராசசுந்தா், தினேஷ், ஆண்டோ உள்பட பலா் கலந்துகொண்டனா்.

மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சிறிய தேரில் சவேரியாா் பவனியாக வந்தாா். கிறிஸ்தவ பாடல்களைப் பாடியபடி பங்கு உடன் சென்றனா். ஏற்பாடுகளை பேராலய பங்குத் தந்தையா்கள் எப்.எக்ஸ்.ராஜேஷ், பி.மிக்கேல் பிரகாசம், ஐ.லூா்துராஜ் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயலக தமிழர்கள் பதிவு செய்ய அழைப்பு

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

SCROLL FOR NEXT