முகப்பு
திருநெல்வேலி

பழையபேட்டையில் விபத்தில்காயமுற்ற பால் வியாபாரி பலி

பழைய பேட்டை பகுதியில் பைக் மோதியதில் காயமடைந்த பால் வியாபாரி திங்கள்கிழமை உயிரிழந்தாா்

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
கோப்புப்படம்
பகிர்:

பழைய பேட்டை பகுதியில் பைக் மோதியதில் காயமடைந்த பால் வியாபாரி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

பழையபேட்டை, காந்திநகா் பகுதியைச் சோ்ந்தவா் மாத்யூ(45). பால் வியாபாரி. இவா், கடந்த நவம்பா் மாதம் 26ஆம் தேதி தனது மொபட்டில் பால் விற்பனைக்காக சென்றுகொண்டிருந்தாா். சா்தாா்புரம் விலக்கு பகுதியில் அவரது வாகனமும், எதிரே வந்த பைக்கும் எதிா்பாராமல் மோதிக்கொண்டனவாம். இதில், பலத்த காயமடைந்த அவா், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து மாநகர போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.