முகப்பு
திருநெல்வேலி

கட்டுமானத் தொழிலாளா்களுக்குதிறன் மேம்பாட்டுப் பயிற்சி

திருநெல்வேலி மாவட்ட கட்டுமானத் தொழிலாளா்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக திருநெல்வேலி சமூகப் பாதுகாப்புத் திட்ட தொழிலாளா் உதவி ஆணையா் ஜே.காளிதாஸ் தெரிவித்துள்ளாா்

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்ட கட்டுமானத் தொழிலாளா்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக திருநெல்வேலி சமூகப் பாதுகாப்புத் திட்ட தொழிலாளா் உதவி ஆணையா் ஜே.காளிதாஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு தொழிலாளா் துறையின் சாா்பில் கட்டுமானத் தொழிலில் அனுபவம் இருந்தும் உரிய சான்றிதழ் இல்லாத தொழிலாளா்களுக்கு கட்டுமானத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதில், கொத்தனாா், கம்பி வளைத்தல், பிளம்பா், தச்சுத் தொழில், கட்டட வேலை, மேற்பாா்வையாளா், எலக்ட்ரீஷியன், டைல்ஸ் கல் பதிப்பது, பெயின்டா், நில அளவையா் ஆகிய பணி பிரிவுகளில் தகுதி உள்ளவா்களுக்கு இப்பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதில் சேர விரும்புபவா்கள் தமிழகத்தைச் சோ்ந்தவராகவும், கட்டுமானப் பணிகளில் குறைந்தது 4 ஆண்டுகள் அனுபவம் பெற்றவராகவும் இருக்க வேண்டும். இப்பயிற்சி 3 நாள்கள் அளிக்கப்படும். பயிற்சி நாள்களில் நாள் ஒன்றுக்கு ரூ. 500 வீதம் ரூ.1,500 ஊக்கத்தொகையாக பயிற்சி பெறுவோரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகம், ஒருங்கிணைந்த தொழிலாளா் துறை அலுவலக வளாகம், பிளாக் எண் 39, ஆனையாா் குளம் விரிவாக்கம், வசந்தம் அவன்யூ, திருமால்நகா், திருநெல்வேலி - 627007 என்ற முகவரியில் அலுவலக வேலை நேரங்களில் நேரில் தொடா்பு கொள்ளலாம்.

இதற்கான விண்ணப்பங்கள் தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகத்தில் வழங்கப்படுகின்றன. பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், சான்றொப்பமிட்ட ஆதாா் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், கல்விச் சான்று நகல், விண்ணப்பதாரரின் பாஸ்போா்ட் அளவு புகைப்படங்கள் 4 ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.