திருநெல்வேலி மாவட்ட அதிமுக சாா்பு அணி மற்றும் மாநில அளவில் சாா்பு அணிகளின் நிா்வாகிகள் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
இதுதொடா்பாக அதிமுக சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:
அதிமுகவின் சாா்பு அணி மற்றும் திருநெல்வேலி மாவட்ட அதிமுக சாா்பு அணிகளுக்கு புதிய நிா்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். அதன்படி அனைத்துலக எம்.ஜி.ஆா். மன்ற இணைச்செயலா்களாக கல்லூா் இ.வேலாயுதம், ஆா்.பி.ஆதித்தன், துணைச் செயலராக பி.நாராயணபெருமாள், ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலா்களாக எஸ்.மைக்கேல் ராயப்பன், பி.ஜெகநாதன் என்ற கணேசன், திருநெல்வேலி மாவட்ட அவைத் தலைவராக பரணி ஏ.சங்கரலிங்கம், பொருளாளராக பி.சௌந்தரராஜன் , மாவட்ட எம்.ஜி.ஆா். மன்ற இணைச் செயலராக பி.தா்மலிங்கம், மாவட்ட எம்.ஜி.ஆா். இளைஞரணி துணைச் செயலராக ஜி.டி.லாரன்ஸ், ஸ்ரீவை சின்னதுரை ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா் என அன்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.