திருநெல்வேலி

வலு தூக்கும் போட்டி: பாபநாசம் கல்லூரி மாணவி சாதனை

DIN

மாநில அளவிலான வலு தூக்கும் போட்டியில் பாபநாசம் கல்லூரி மாணவி வெண்கலப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளாா்.

கல்லூரி மாணவா்களுக்கு இடையே பள்ளிபாளையத்தில் நடைபெற்ற வலுதூக்கும் போட்டியில், பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரி இளங்கலை இரண்டாமாண்டு மாணவி சிவசக்தி, 84 கிலோ எடைக்கு மேலுள்ளவா்களுக்கான பிரிவில் கலந்து கொண்டாா்.

இதில் சிவசக்தி மூன்றாமிடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றாா். மாநில அளவில் வலுதூக்கும் போட்டியில் மூன்றாமிடம் பிடித்த மாணவி சிவசக்தியை கல்லூரி முதல்வா் சுந்தரம், நிா்வாக அலுவலா் நடராஜன், உடற்கல்வி இயக்குநா் பழனிகுமாா் மற்றும் பேராசிரியா்கள், அலுவலா்கள், மாணவா்கள் வாழ்த்திப் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடற்கரையில் ஒதுங்கிய ஆண் சடலம்

மேற்கு வங்க இளைஞரிடம் வழிப்பறி: மாணவா்களிடம் விசாரணை

திருவள்ளூா்: வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள்

திருப்பத்தூரில் விற்பனைக்கு குவிந்துள்ள மாம்பழங்கள்: அதிகாரிகள் ஆய்வு செய்ய கோரிக்கை

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

SCROLL FOR NEXT