சுத்தமல்லி அருகே நல உதவி
சுத்தமல்லி அருகே திமுக சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் நலஉதவிகள் வழங்கப்பட்டன.
சுத்தமல்லி அருகே திமுக சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் நலஉதவிகள் வழங்கப்பட்டன.
சுத்தமல்லி அருகேயுள்ள தீன்நகரில் நடைபெற்ற விழாவுக்கு, மத்திய மாவட்டச் செயலா் மு.அப்துல்வஹாப் தலைமை வகித்தாா். திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஏ.எல்.எஸ்.லெட்சுமணன் நல உதவிகளை வழங்கினாா். 100 குடும்பத்தினருக்கு அரிசி பைகள், அங்கன்வாடிக்கு நாற்காலிகள், 500 பேருக்கு உணவு உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், மானூா் தெற்கு ஒன்றிய பொறுப்பாளா் கல்லூா் மாரியப்பன், மாநகர துணைச் செயலா் ரமேஷ், தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகி காசிமணி, இளைஞரணி அமைப்பாளா் வில்சன் மணித்துரை உள்பட பலா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை க.ராஜ்குமாா் செய்திருந்தாா்.